சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வம்

மாசி பெரியண்ணன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிக்குன்றில் அமைந்துள்ளது. சங்கிலிகருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் எனப் பல பெயர்களில் இருக்கும்அழைக்கப்படுகிறது. சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடிஉயரமுள்ள வேங்கைஎன்னும் மிருகவாகனத்தின் மீது பெரியண்ணன்அமர்ந்திருக்கிறார். கொங்கு மற்றும் சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வமாகவிளங்குகிறது.

கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்புஏற்பட்டதாக கூறுகின்றனர். மாசிக்குன்றில் அமைந்திருக்கிறது.

காசியிலிருந்து பார்வதி தேவியும், சிவனும் தென்திசை நோக்கி வந்தனர். பார்வதி தேவி காமாட்சியாகவும், சிவன் பெரியண்ணனாகவும் மனிதஉருவெடுத்தனர். துறையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில்காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார். பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின்பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது. அந்த குன்றிலிருந்து அடுத்தகுன்றுக்கு சென்றார் பெரியண்ணன். அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது. இதுபோல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார். மனிதஉருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர். அவர்களின்பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்துவருகிறார்.



சித்தர் காரைப்பெரிய நாயனார் யோக சமாதி

தல சிறப்பு : இத்தலம் உசிலை மரங்கள் வயல்கள் நிறைந்திருந்ததால் காரைவயல் என்றழைக்கப்பட்டது தற்போது இப்பெயரே "கார வயல்' என்று சுருங்கிவிட்டது.பவுர்ணமியன்று மாலையில் பேச்சியம்ம னுக்கு ஏழு வகையான அபிஷேகமும்,சித்தர் காரைப்பெரிய நாயனாருக்கு பாலபிஷேகமும் செய்கிறார்கள்.



உசிலை மரங்கள் அடிவாரத்தில் பேச்சியம்மன்

திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டியே அர்ச்சகரை தொடர்பு கொண்டால், வசதிப்படி தரிசிக்கலாம்.

பொது தகவல் : இது சிறிய கோயில். கோபுரம், கொடிமரம் கிடையாது.சித்தர் காரைப்பெரிய நாயனார் சன்னதி கோஷ்டத்தில் ஐயனார் இருக்கிறார்.

சிறப்பு: உசிலை மரங்கள் அடிவாரத்தில் அமைந்த கோயில் இது.சிவலிங்கம் போன்று அமைந்த நாகம் குடை பிடிப்பது போல அமைந்த கோயில் இது.சிறிய சன்னதியில் காரைப்பெரிய நாயனார் காட்சி தருகிறார்.கோயிலுக்கு அருகில் சித்தர் உருவாக்கியதாகக் கருதப்படும் உசிலை தீர்த்தம் உள்ளது.

நாயனார் சுவாமி சன்னதிக்குப் முன்புறம், பேச்சியம்மன் கோயில் உள்ளது.இயற்கையாக அமைந்த இக்கோயில், பார்ப்பதற்கு தீபத்தின் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதைப் போல அமைந்துள்ளது.

பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின் அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர்.சித்தர்கள் தவம் புரிந்த இடங்கள், இந்த கோயில் பகுதியில் வேறுவேறு இடங்களில் உள்ளது.கோயில் வளாகத்தில் உசிலை மரங்கள் அடிவாரத்தில் பேச்சியம்மன் மட்டும் இருக்கிறார். நேர்த்திக்கடன் : சுவாமி,சித்தர் காரைப்பெரிய நாயனாருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

நெல் வயல்கள் சூழ்ந்த இந்த அழகான கார வயல் கிராமம்,அறந்தாங்கிலிருந்து திருபெருந்துறை செல்லும் சாலையில், 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.